தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.11

திகார் சிறையில் முன்னாள் அமைச்சர் ராசா - மேலும் சில கைதுகள் தொடரலாம்..?


இந்தியாவின் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு  அமைச்சர் ஆ.ராசாவை  நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டமையால், அவர்  திகார் சிறைக்கு
கொண்டு செல்லப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன
விசாரணைகளுக்காக  சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த ராசா இன்று மீண்டும் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர் மீதான விசாரணை முடிந்திருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 3ந் திகதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்  தொடர்ந்து அவர் உடனடியாக திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் ' குற்றமற்றவன் என்பதை நிரூபித்து, மீண்டு வருவேன் ' என ராசா தெரிவித்திருக்கின்றார். இதே வேளை ராசாவின் செயலாளர்கள் இருவரும், மேற்படி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், ஏற்கனவே ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க; இந்த ஊழல் தொடர்பில் மேலும் சில கைதுகள் இடம்பெறலாம் எனவும், அவற்றில் சில தமிழகத்திலும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  சில தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. ஆயினும் இத்தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட செய்தித் தகவல்களாக இல்லை என்பதும் கவனத்திற் கொள்ளதக்கது.

0 கருத்துகள்: