தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.12

யாசர் அரபாத் உடல் வெளிக் கொண்டுவந்துள்ளனர்.


இஸ்ரேலிய உளவுப் பிரிவான மூசாட் அமைப்பு பொ லோனியம் விஷம் வைத்து பாலஸ்தீன விடுதலைப் போராட்ட தலைவர் யாசர் அரபாத்தை கொலை செ ய்ததாக குற்றச் சாட்டு கிளம்பியது தெரிந்ததேஇதன் பொருட்டு விசாரணைகளை மேற்கொள்ள பாலஸ்தீ னம் வந்த நிபுணர் குழுவினர் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அரபாத்தின் உடலத்தை சமாதியில் இருந் து
வெளிக் கொண்டுவந்துள்ளனர்.பல தொன் எடை யுள்ள சீமெந்து கொங்கிறீற்றால்
இறுக்கப்பட்டிருந்த இந்த உடலத்தை வெளி யே எடுக்க பலத்த சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சிய வைத்தியசாலையில் மரணமடைந்த அரபாத் அணிந்திருந்த உடை அவருடைய மனைவி சுகாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதை அவர் சுவிற்சலாந்தில் உள்ள நிபுணர்களிடம் ஒப்படைத்து பரிசோதனை செய்தபோது அதில் பொலோனியம் றேடியோ கதிர் வீச்சு அவதானிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அரபாத் மரணம் கொலை என்ற கோணத்தில் ஆடிக்கால மேகமாக ஓடித்திரும்பியது, இப்போது பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்: