தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.8.12

துணை குடியரசு தலைவராக நேற்று பதவியேற்றார் ஹமீத் அன்சாரி


இந்தியாவின் துணைக்குடியரசு தலைவராக ஹமீத் அன்சாரி      நேற்று மீண்டும் பதவியேற்றார்.தொடர் ந்து இரு தடவை நாட்டின் துணை குடியரசு தலைவ ராக பதவி வகித்தவர் எனும் பெருமை ராதாகிருஷ் ணனுக்கு கிடைத்திருந்தது. தற்போது அப்பட்டியலி ல் ஹமீத் அன்சாரியும் இணைந்துள்ளார். இன்று கா லை ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முன் னிலையில் சத்தியப்பிரமா
ணம் செய்து பதவியேற்றார் அன்சாரி. இந்நிகழ்வில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இம்முறை நடந்து முடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஷ்வந்த் சிங்கை 238 வாக்குகள் வித்தியாசத்தில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றார்.  காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்சாரிக்கு தேசியவாத காங்கிரஸ், திமுக என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. இன்று பதவியேற்றுக்கொண்டதன் மூலம், அன்சாரி நாட்டின் 14 வது துணை குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்: