தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.7.12

கென்யாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் குண்டு வெடித்து 10 பேர் பலி: 40 பேர் படுகாயம்


கென்யா நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் கெரிச்சா நகரில் உள்ள 2 கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தகவலை பிராந்திய போலீஸ் துணை தலைமை அதிகாரி பிலிப் நுடோலோ தெரிவித்தார். இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் சதி செயலாக
இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு போராளிகளை ஒடுக்க கென்யா ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளது. இதனால் கென்யாவில் தீவிரவாதிகள் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

0 கருத்துகள்: