தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.12

கட்டாய கருக்கலைப்புக்கு மன்னிப்பு கோரியது சீனா


7 மாத நிறை கர்ப்பிணியாக இருந்த சீனப்பெண்மணி ஒருவருக்கு கட்டாய கருக்கலைப்புசெய்யப்பட்ட ச ம்பவத்திற்கு சீனா மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் இதற்கு காரணமாகவிருந்த மருத்துவமனை அதிகா ரிகள் மூவரை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித் துள்ளது. சீனாவின் ஷாங்க்ஷி மாகாணத்தில், ஃபென் ங் ஜிமேய் எனும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக் கு, சீனாவின் ஒரு குழந்தை
திட்டத்தின் கீழ் கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது.
இதனை நபர் ஒருவர் புகைபடமெடுத்துக்கொ ண்ட்டார். குறித்த தாய், சேயின் நிலை எப்படிப்பட்டது என உணர்ச்சிகளை வெளிப்படுத்திய அப்புகைப்படங்கள் சில இணையத்தில் வெளிவந்து கடும் சர்ச்சையை கிளப்பின.

6 மாதத்திற்கு அப்பால் கருக்கலைப்பு செய்வதற்கு சீனச்சட்டத்தில் அனுமதி இல்லை. ஆக எப்படி இந்த பெண்ணுக்கு 7 மாதத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்டது என சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டனர். மேலும் சீனாவின் ஒரு குழந்தை திட்டத்தின் கீழ் பெண்கள் மோசமாக பாதிப்புறுவதாகவும் பல்வேறு நாடுகளிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்நகர சபை அதிகாரிகள் ஃபெங் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளனர். ஃபெங்கிற்கு 2007ம் ஆண்டு ஏற்கனவே ஓர் குழந்தை பிறந்தது. இதனால் இரண்டாவது குழந்தை அவர் பெற்றெடுக்க கூடாது என இக்கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: