தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.12

பக்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 9 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை


பக்ரைன் நாட்டில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் பலர் பிடிபட் டார்கள். இவர்களில் 11 பேருக்கு ஜெயில் தண்டனை யும், 9 பேரை விடுதலை செய்தும் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்து 9 டாக்டர்கள் மேல் மு றையீடு செய்தார்கள். இதனை விசாரித்த நீதிமன் றம் மருத்துவ அதிகாரியும், டாக்டருமான அலி அல்-எகெய் என்பவருக்கு 5 ஆண்டு
ஜெயில் தண்டனையும், மற்ற 8 பேருக்கு ஒரு மாதம் முதல் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. 

இந்த வழக்கில் ஏற்கனவே 15 ஆண்டு தண்டனை பெற்ற 2 பேர் அப்பீல் எதுவும் செய்யவில்லை. இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கலாம் அல்லது எங்காவது பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.

0 கருத்துகள்: