தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.6.12

வவுனியா சிறைச்சாலையில் தொடரும் கைதிகளின் போராட்டம்: பதற்றம் நீடிப்பு


இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையி ல், நேற்று சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடு த்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமா கப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தனர்.வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு க் கொண்டு செல்ல ப்பட்டதையடுத்து, அவர்
களை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண் டுவர வேண்டும் எனக் கோரி, இந்த சிறைக்கைதிகள் புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலேயே நேற்று சிறைக்காவலர்கள் மூவர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிசார் கூறுகின்றனர்.

எனினும் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு வழக்குத் தவணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட தமது சக கைதி ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தனித்து அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கே கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே நேற்று முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் கைதிகள் தரப்பில் கூறப்படுகிறது

மூன்றாவது நாளாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழலிலேயே நேற்றிரவு சிறைக்காவலர்கள் மூவர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்பதற்கும், வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் சிறையதிகாரிகள் நீதிமன்றத்தின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி: பிபிசி

0 கருத்துகள்: