தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.12

ஆப்கான் அமைதிக் குழுவின் மூத்த தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை


ஆப்கானிஸ்தான் அமைதிக் குழுவின் மூத்த தலைவரான அர்சலா ரஹ்மானி, இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவர் ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் நெருங்கிய ஆலோசகரும் ஆவார்.அர்சலா ரஹ்மானி இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் யாரோ அவரை நோக்கி துப்பாகியால் சுட்டனர்.உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு பரிதாபமாக
உயிரிழந்தார். ரஹ்மானியில் இடது கையில்தாக்கிய குண்டு, கை வழியாக பாய்ந்து இதயத்தை துளைத்ததாக அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தலிபான் ஆட்சியில், ரஹ்மானி உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனாதிபதி கர்சாயின் கட்சியில் சேர்ந்த ரஹ்மானி, தற்போதைய அரசில் அங்கம் வகித்து வந்தார். சமீபத்தில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரஹ்மானி விரிவுபடுத்தினார்.
இந்நிலையில் ரஹ்மானி கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்கா ஆதரவுடன் ஆப்கானில் கர்சாய் மேற்கொண்டுள்ள சமாதான நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

0 கருத்துகள்: