தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.4.12

அமெரிக்காவின் தீவிரவாதமே எனது தலைக்கு விலை நிர்ணயம் - ஹபீஸ் சயீத்


பாகிஸ்தானை மையமாக கொண்டு செயற்பட்டு வரும் ல ஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தலைவரும், ஜமாத் உத் தாவா அமைப்பின் முக்கியஸ்தருமான ஹபீஸ் சயித் பற்றி உளவுத்தகவல் தருவோருக்கு 10 மில்லியன் அமெ ரிக்க டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக் கா அறிவித்திருந்தது.இதற்கு லஷ்கர் இ தொய்பா நிறுவன ர் ஹபீஸ் முகம்மது சயீத் அமெரிக்கா எனது தலைக்கு 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்திருப்பதே ஒரு தீவிர வாதம் தான் என
கூறியுள்ளார்.மேலும் இந்தியாவின் தூண்டுதலால் தான் அ மெரிக்கா இவ்வாறு அறிவித்துள்ளது எனவும் அமெரிக்கா எங்களை முட்டாளா க்க பார்க்கின்றது எனவும் சயீத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மும்பை 11/26 பயங்கரவாத தாக்குதலுக்கு சூத்திரதாரியாக கருதப்படுவதுடன் பல்வேறு தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்படும் ஹபீஸ் சயீத் இந்தியாவால் தேடப்பட்டு வரும் மற்றுமொரு முக்கிய குற்றவாளியாக திகழ்கிறார். எனினும் இவர் பாகிஸ்தானில் பாதுகாப்பாகவே இருப்பதாக அண்மையில் தகவல்கள்  வெளிவந்த நிலைக்கு அவருடைய தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் USD அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: