சூரிய காந்த புயலால் பூமிக்குஎந்த ஆபத்தும் இல் லை வாஷிங்டன்,மார்ச்: சூரியகாந்த புயல் தாக்கிய போதும் பூமிக்கு எந்த பாதிப்பும்ஏற்படவில்லை என் றுவிஞ்ஞானி கள் கூறியுள்ளனர்.சூரியனில் ஏற்படு ம்வேதியியல் மாற் றங்களால் காந்த புயல்கள் உரு வாகின்றன. சூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பா க காணப்படும்பகுதி, சில நேரங்களில் அதிக வெப்பத்
தால் அதில் இருந்து பிய்த்துக்கொண்டு காந்த புய லாக வெளியேறும். இது பல லட்சம் மைல் வேகத்தில்பூமியை நோக்கி பாயும். இதனால் செயற்கைக் கோள், மின்சாரம்,விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.இதுபோல் அவ்வப்போது நடந்தாலும் இதுவரை பூமிக்கு எந்த ஆபத்தும்நிகழவில்லை.இந்நிலையில் மிகப்பெரிய சூரிய புயல் ஒன்று நேற்று காலை 6 மணிக்குபூமியை தாக்கியது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரியது. வழக்கமான சூரிய புயலில் இருந்து இது 10 மடங்கு பெரியதுஎன்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். புயல் தாக்கும் போது, செயற்கைகோள், ஜிபிஎஸ், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள்பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தனர். ஆனால், நேற்று காலைதாக்கிய சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லைஎன்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். சூரிய புயல் தாக்குதலால், பூமியின்காந்த புலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள்உறுதிப்படுத்தினர்.கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சூரியனில் இருந்து பிரகாசமான ஒளிபிய்த்து கொண்டு பூமி நோக்கி அதிவேகமாக புறப்பட்டது. பின்னர்படிப்படியாக சோப்பு நுரையில் இருந்து உருவாகும் உருண்டை போலபெரிதானது. இதுபோன்ற சூரிய புயல் தாக்குதலால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. ஆனால், காந்த புயல், ரேடியோ அலை புயல்,கதிர்வீச்சு புயல் என்ற 3 வகை புயல்களால் தகவல் தொழில்நுட்பங்கள்பாதிக்கப்படும். பெரும்பாலும் இதுபோன்ற புயல்கள் பூமியின் வடதுருவம் அல்லது தென்துருவங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் விமானபோக்குவரத்து பாதையில் குழப்பங்கள் நிகழும் என்றனர்.கடந்த 1989ம்ஆண்டு சூரிய காந்த புயல் தாக்கியதில், கனடாவின் கியூபெக்மாகாணத்தில் மின் கடத்தி அமைப்பான கிரிட் முற்றிலும்பாதிக்கப்பட்டது. இதனால் 60 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
தால் அதில் இருந்து பிய்த்துக்கொண்டு காந்த புய லாக வெளியேறும். இது பல லட்சம் மைல் வேகத்தில்பூமியை நோக்கி பாயும். இதனால் செயற்கைக் கோள், மின்சாரம்,விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.இதுபோல் அவ்வப்போது நடந்தாலும் இதுவரை பூமிக்கு எந்த ஆபத்தும்நிகழவில்லை.இந்நிலையில் மிகப்பெரிய சூரிய புயல் ஒன்று நேற்று காலை 6 மணிக்குபூமியை தாக்கியது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரியது. வழக்கமான சூரிய புயலில் இருந்து இது 10 மடங்கு பெரியதுஎன்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். புயல் தாக்கும் போது, செயற்கைகோள், ஜிபிஎஸ், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள்பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தனர். ஆனால், நேற்று காலைதாக்கிய சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லைஎன்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். சூரிய புயல் தாக்குதலால், பூமியின்காந்த புலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள்உறுதிப்படுத்தினர்.கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சூரியனில் இருந்து பிரகாசமான ஒளிபிய்த்து கொண்டு பூமி நோக்கி அதிவேகமாக புறப்பட்டது. பின்னர்படிப்படியாக சோப்பு நுரையில் இருந்து உருவாகும் உருண்டை போலபெரிதானது. இதுபோன்ற சூரிய புயல் தாக்குதலால் மனிதர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. ஆனால், காந்த புயல், ரேடியோ அலை புயல்,கதிர்வீச்சு புயல் என்ற 3 வகை புயல்களால் தகவல் தொழில்நுட்பங்கள்பாதிக்கப்படும். பெரும்பாலும் இதுபோன்ற புயல்கள் பூமியின் வடதுருவம் அல்லது தென்துருவங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் விமானபோக்குவரத்து பாதையில் குழப்பங்கள் நிகழும் என்றனர்.கடந்த 1989ம்ஆண்டு சூரிய காந்த புயல் தாக்கியதில், கனடாவின் கியூபெக்மாகாணத்தில் மின் கடத்தி அமைப்பான கிரிட் முற்றிலும்பாதிக்கப்பட்டது. இதனால் 60 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக