தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.2.12

ஆப்கானிஸ்தானில் மூன்று இத்தாலிய படை வீரர்கள் பலி. காரணத்தை கூற நேட்டோ படை மறுப்பு.


மேற்கு ஆப்கானிஸ்தானில் வாகனம் ஒன்று நேற்று பள்ளத்தில் விழுந்ததில் மூன்று இத்தாலிய படைவீரர்கள் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இத்தாலிய படைவீரர்களும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலைய தொழிலாளர்களும் மேற்கு ஹெராத் மாகாணத்தின் ஷிசந்தா மாவட்டத்திலுள்ள அணை ஒன்றை ஆய்வு செய்ய சென்றுக்கொண்டிருந்தபோது ஈரத்தன்மை கொண்ட சாலையில்

வாகனம் வழுக்கியதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் அப்துல் ரவூப் அஹ்மாதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர்களின் இறப்பை உறுதி செய்த நேட்டோ படை அவர்களின் அடையாளங்களை உடனடியாக வெளியிடவில்லை. மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதையும்  கூறவில்லை.

0 கருத்துகள்: