தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.1.12

வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு இறுதி கெடு

புதுடெல்லி, ஜன. 22-  வாகனங்களுக்கு உயர் பாதுகா ப்பு நம்பர் பிளேட் பொருத்துவதை உறுதிப்படுத்த வே ண்டும் என்று கடந்த டிசம்பர் 8-ந் தேதி சுப்ரீம் கோர்ட் டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவைமா ர்ச் 31-ந் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தலை மை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான சுப் ரீம் கோர்ட்டு பெஞ்ச் நேற்று இறுதிக்கெடு
விதித்தது.இ ந்த உத்தரவை அமல்படுத்தாத மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். நம்பர் பிளேட் பிரச்சினையை இத்துடன் முடித்துக் கொள்ளப் போவதாகவும், இதுதொடர்பாக மேற்கொண்டு எந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.

0 கருத்துகள்: