தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.1.12

இந்திய வம்சாவளி பெண்ணை கற்பழித்த அமெரிக்கருக்கு 32 ஆண்டு ஜெயில் தண்டனை

நியூயார்க், ஜன. 7-  அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கு யின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெர்ரி ராம்ரத்தன்(வயது 39 ). தனியார் துப்பறியும் நிபுணர். இவர் இந்திய வம்சாவளி யை சேர்ந்த சீமோனா சுமசார்(36) என்ற பெண்ணை காத லித்தார். இந்தநிலையில் 2009-ம் ஆண்டு இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு காதல் முறிந்தது. அத ன்பிறகும்
காதலியின் வீட்டின் கீழ்தளத்தில் தங்கி இருந் த அவர் துப்பாக்கி முனையில்
காதலியை தனது அறைக்கு இழுத்துச் சென்று கற்பழித்தார்.

இந்த வழக்கில் ராம்ரத்தன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகும் காதலியை பழிதீர்க்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டார். வழிப்பறி கொள்ளையில் காதலி ஈடுபட்டதாக பொய் புகார் கொடுத்து போலீசில் சிக்க வைத்தார். இதில் சுமார் 7 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பிறகு தனது மீதான கற்பழிப்பு வழக்கை சிதைக்க பல சதித்திட்டங்களில் ராம்ரத்தன் ஈடுபட்டார்.
இந்த வழக்கில் தற்போது ராம்ரத்தனுக்கு 32 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு கருணை எதுவும் காட்ட முடியாது என்று நீதிபதி ரிச்சர்ட் பவுச்சர் குறிப்பிட்டு இந்த தீர்ப்பை வழங்கினார்.

0 கருத்துகள்: