
சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, 2006 ம் ஆண்டு தூக்கிலிடப்படும்வரை சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு அமெரிக்கப்படைகள் வெளியேறவுள்ளன. இத்தருணம் சதாமின் சிறைக்கொட்டடியில் அவருக்கான விசேட மலசலகூடம் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்ட இந்த மலசல கூடம் மிக பாதுகாப்பான கதவினையும், சிறைக்குள் இருந்து வருவதற்கான இணைப்பினையும் கொண்டது. இந்த மலசலகூடம் அமெரிக்காவில் உள்ள மிலிட்டரி போலீஸ் நூதனசாலையில் அமெரிக்கர்களின் வெற்றியின் சின்னமாக பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இது ஒரு நினைவுச் சின்னமாக இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஜோர்ஜ் புஸ் ஆரம்பித்த போருக்கு கிடைத்த சிறந்த பரிசென்று பலர் கேலிச்சித்திரம் வரைய காரணமாகிவிடும் என்பதும் கவனிக்கத்தக்கது. அணு குண்டை தேடிப்போனார்கள் கிடைக்கவில்லை இப்போது சதாம் அணு குண்டை டாய்லட்டில் போட்டிருக்கிறாரோ என்று ஆராயப்போகிறது அமெரிக்கா என்று அந்த சித்திரம் அமைந்தாலும் ஆச்சரியப்பட இல்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக