தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.11.11

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மும்பைக்கு திடீர் விஜயம்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் W புஷ் நேற்று மாலை, தனிப்பட்ட பயணமாக
மும்பை வந்தடைந்தார். முன்னணி காப்புறுதி நிறுவனமொன்று ஒழுங்கு செய்துள்ள வர்த்தக கூட்டமொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு பேசும் முகமாக அவரது விஜயம் அமைந்திருக்கலாம் என தகவல்கள்
வெளியாகியுள்ளன.

தெற்கு மும்பையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் ஓய்வெடுத்து கொள்வதாகவும் இதையொட்டி குறித்த இடத்தில் இரகசியமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தென்கொரியாவின் போயிங் 767 விமானத்தின் மூலம் மும்பை வந்தடைந்ததாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக கடந்த 2006ம் ஆண்டு புஷ் இந்தியாவுக்கு வந்திருந்தார்.  ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த  காலப்பகுதி அது.

தற்போது ஈராக்கில் அமெரிக்க படைகளின் நடவடிக்கைகள் யாவும் முடிவுற்றதாலும், ஆப்கானிஸ்தானிலும், யுத்த நிலைமை மெல்ல மெல்ல மாறிவருவதாலும் புஷ்ஷின் விஜயம், இந்நாடுகளின் அரசியல் சார்ந்ததாக இல்லாது சிலவேளை  தனிப்பட்டதாகவெ இருக்க முடியும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இதேவேளை புஷ் நாளை புதன்கிழமை மும்பையிலிருந்து புறப்படவிருக்கிறார் எனவும், அதுவரை அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கிவேண்டியது தமது கடமை எனவும் நீதி மற்றும் சட்டப்பிரிவிக்கான காவற்துறை ஆணையர் ரஜினிஷ் சேத் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

எனினும் புஷ்ஷின் இந்திய விஜயத்திற்கான நோக்கம் தனக்கு தெரியாது எனவும், அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பது தொடர்பிலும், அவரது நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பிலும் தகவல் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: