தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.11

ஒரே ஊசியில் உடலை இளைக்கவைக்கலாம் !!!

மெல்பர்ன் : குண்டானவர்கள் ஒரே ஒரு ஊசி மூலம் இளைக்கலாம் என்று ஆஸ்திரேலிய வாழ் இந்திய டாக்டர் தலைமையிலான ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தில் டாக்டராக இருப்பவர் சுசில் ரானே. இவரது தலைமையிலான ஆராய்ச்சி குழு, உடல் பருமனை குறைப்பதற்கான வழிகள் பற்றி தீவிர ஆய்வு நடத்தியது. அதில் முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் உடல் பருமனை குறைக்கும் வழியை ஊசி மருந்து வடிவில் கண்டுபிடிக்க முடியும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.

உடலில் சேரும் வெள்ளை கொழுப்புதான் கலோரிகளை சேர்த்து வைத்து உடல் பருமன் ஏற்படக் காரணமாகிறது. அதற்கு நேர்மாறான குணமுடைய பிரவுன் கொழுப்புகள், கலோரிகளை வெளியேற்றி, வெள்ளை கொழுப்பை கரைத்து விடுகிறது. எனவே, பருமனானவர்களுக்கு பிரவுன் கொழுப்பு பயன் அளிப்பது எலியிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உறுதியானது.

இந்த முறையில் விரைவில் மருந்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளதாக சுசில் ரானே தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘‘உடல் பருமன் பெரிய பிரச்னையாக உள்ளது. அதற்கு எதிரான மருந்துகள் பயனளிப்பதில்லை. டயட் என்ற பெயரில் உடலை வருத்திக் கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கு விடிவு பிரவுன் கொழுப்பில் இருக்கிறது. அதை ஊசி வடிவில் கொண்டு வர ஆராய்ச்சி தொடர்கிறது. அதில் வெற்றி பெற்றதும் ஒரு முறை ஊசி போட்டதும் உடலின் கெட்ட கொழுப்புகள், கலோரிகள் கரைந்து உடல் மெலிந்து விடலாம்’’ என்ற டாக்டர் சுசில் ரானே தெரிவித்தார்.

0 கருத்துகள்: