பெல்கிரேடு, ஐரோப்பாவில் உள்ள போஸ்னியாவில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் ரட்கோ எம்லாடிக்.
இவர் போஸ்னியாவில் 1992-ம் ஆண்டு முதல் 95-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போரின்போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் ஆண்கள், சிறுவர்கள் என 8 ஆயிரம் பேரை கொன்று குவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவரை ஐ.நா.வின் போர் குற்றங்களுக்கான கோர்ட்டு தேடிவந்தது. இதனால் தலைமறைவான இவர் கடந்த 16 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். செர்பியா நாட்டின் எல்லையில் பதுங்கி இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக