தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.2.11

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் - `கடவுள் கொடுத்தது' : தந்தை


சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. இது கடவுள் கொடுத்தது என்று இக்குழந்தைகளின் தந்தை கூறியுள்ளார்.

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். 3-ஆவது மாதத்தில் பரிசோதனைக்காக சாந்தியின் கணவர் ஆனந்த் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது, ஸ்கேன் செய்து பார்த்தபோது, சாந்தியின் வயிற்றில் 3 கருக்கள் வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில், ஜனவரி 27ஆம் தேதி சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம்  ஆவடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.

3 குழந்தைகள் வயிற்றில் இருப்பதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பத்திரமாக எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 28ஆம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் எடுக்கப்பட்டன.

பரிசோதனையின்போது, 3 குழந்தைகளாக தெரிந்தது, பிரசவத்தின்போது 4 குழந்தைகளாக பிறந்ததை கண்டு டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதில், தலா 2 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்கும்.

தற்போது, தாயும், குழந்தைகளும் நன்றாக உள்ளனர். 4 குழந்தைகள் பிறந்தது குறித்து ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``முதலில் பரிசோதனை செய்த டாக்டர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர். பின்னர், பிரசவத்தின்போதுதான், 4 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தனர். ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது ஒரு குழந்தை மறைந்த நிலையிலேயே இருந்துள்ளது. அதனால்தான், 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். எத்தனை குழந்தை என்றாலும், எல்லாம் கடவுள் கொடுத்தது'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்
.

0 கருத்துகள்: