தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.10.12

புதிய அரசியல் கட்சிக்காக மலிவான விளம்பரம் செய்கிறார் கேஜ்ரிவால் : வதேரா தாக்கு


தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி அர் விந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்பி வருவதாக சோ னியா காந்தியின் மருகன் ராபர்ட் வதேரா குற்றம் சு மத்தியுள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பை சேர்ந் த பிரசாந்த் பூஷன் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆ கியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராபர்ட் வதேரா மீது  மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வை த்திருந்தனர். டி.எல்.எப் ரியல்
எஸ்டெட் நிறுவனத்திடமிருந்து வட்டியில்லா கடன் பெற்றதாகவும், அதற்கு பிரதி பலனாக குறைந்த விலையில் நிலம் ஒதுக்கவும், பல்வேறு மாநிலங்களில் அந்நிறுவனம் நிலங்களை வளைத்து போட உதவியாக இருந்ததாகவும் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள வதேரா,  என் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களை கேஜ்ரிவால் சுமத்தியுள்ளதாகவும், தமது புதிய அரசியல் கட்சிக்கு மலிவான விளம்பரம் தேடுவதற்காக அவர் இவ்வாறு குற்றம் சுமத்துவதாகவும் கூறியுள்ளார். கடந்த 21 வருடங்களாக இந்திய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே தான் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முயற்சிகள் தன்னையும், தனது குடும்பத்தையும் பாதிக்க செய்துள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார். 

0 கருத்துகள்: