தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.12

வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்னா ராஜினாமா


மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கும் வேளையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ள கிருஷ்ணா, தொடர்ந்து கட்சி பணி ஆற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.80 வயதாகும் கிருஷ்ணா, கர்நாடக மாநில
முதல்வராக இருந்தவர். கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக, எடியூரப்பாவின் தொடர் மிரட்டல்களால் வெறுத்து போயிருக்கும் நிலையில், விரைவில் இடைதேர்தல் வர கூடிய வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது. இதனால் கிருஷ்ணாவை கட்சி பணிக்கு அனுப்ப காங்கிரஸ் மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்: