தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.12

மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக நோபல் பரிசு பெற்ற குந்தர்க்ராஸ்!


டெல் அவீவ்:இஸ்ரேலின் அணுஆயுதங்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி கவிஞர் குந்தர் க்ராஸ் மீண்டும் தனது கவிதையில் சாடியுள்ளார். இவ்வாண்டின் துவக்கத்தில் குந்தர்க்ராஸ் எழுதிய இஸ்ரேலுக்கு எதிரான கவிதை சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள  ‘வன் ஹிட் வண்டேர்ஸ்’ என்ற புதிய கவிதை தொகு
ப்பில் மீண்டும் இஸ்ரேலின் அணுஆயுத திட்டங்கள் குறித்து விமர்சித்துள்ளார்.
குந்தர் க்ராஸ் தனது கவிதையில் இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை பிரிட்டனின் பிரபல பத்திரிகைக்கு கசியச் செய்த பிரபல அணு விஞ்ஞானி Mordechai Vanunu வின் நினைவுகள் ஊடே சஞ்சரிக்கிறார். கவிதையின் ஓரிடத்தில் Mordechai Vanunu ஐ உத்தமப் புருஷர்(paragon)என வர்ணிக்கிறார்.
அணு ஆயுத ரகசியங்களை கசியவிட்டதற்காக Mordechai Vanunuஐ இஸ்ரேல் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. 1986-ஆம் ஆண்டு Mordechai Vanunu கைது செய்யப்பட்டார். 18 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையாகும். 2004-ஆம் ஆண்டு அவர் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகும் மீண்டும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இஸ்ரேலிய அரசு பல தடவை அவரை சிறையில் அடைத்தது.

0 கருத்துகள்: