தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.12

நோய் தெரிந்து 12 வாரங்களுக்குள் சிகிச்சை; ஸ்காட்லாந்தில் சட்டம்

ஸ்காட்லாந்தில் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்ட றியப்பட்டு அதிகபட்சம் 12 வாரங்களுக்குள் அதற்கான சிகிச் சையைப் பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமை இருப்பதா க புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான சாசனத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளில் இதுவும் ஒன் றாகும்.ஸ்காட்லாந்தில் நோயாளிகள் முன்னெப்போதுமில் லாத அளவுக்கு விரைவாக சிகிச்சை பெறுகிறார்கள், இப் போது அந்த வசதி சட்டரீதியாக உத்தரவாதம்
பெற்றுள்ளது' என்று சுகாதாரத்துறைச் செயலாளர் அலெக்ஸ் நீல் தெரிவி த்தார்.ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை (என்எச்எஸ்) இங்கிலாந்து, ஸ்காட்லாந்து,வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என ஒவ்வொ ரு அரசுகளிலும் சுயாதீனமாகவே இயங்குகிறது.

இங்கிலாந்தின் என்எச்எஸ் யாப்பின்படி, மருத்துவர் ஒருவரால் சிகிச்சைக்காக பணிக்கப்பட்ட நோயாளி ஒருவரை 18 வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு காத்திருக்க வைக்கமுடியாது.

வேல்ஸ் தேசத்தைப் பொருத்தவரை, அங்கு 36 வாரங்களுக்குள் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்தாக வேண்டியுள்ளது. சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகளில் 95 வீதமானவர்களை 26 வாரங்களுக்குள்ளேயே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அங்கு சட்டம் இருக்கிறது.

வட-அயர்லாந்திலும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளைத் தவிர, நோயாளிகளை 36 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வைக்கமுடியாது.

0 கருத்துகள்: