தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.10.12

நாய்களை முத்தமிட்டால் மனிதர்களின் பற்களுக்கு ஆபத்து. ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை


நாய்களை முத்தமிட்டால், அதன் வாய்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள், மனிதர்களின், பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.ஜப்பானிய விஞ்ஞானிகள், 66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல நாய்களுக்கு, அதன் வாய் பகுதியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு, பாக்டீரியா

தொற்று ஏற்பட்டு, பல் ஈறுகளில் நோய் இருந்தது தெரிய வந்துள்ளது."ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் இந்த கருத்து, நாயிடம் உள்ள அன்பை குறைக்க வழி செய்யும்' என, அமெரிக்க கால்நடைத்துறை மருத்துவர் ஆன் ஹோகன்ஹாஸ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: