தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.10.12

10 போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றம்!


ஈரானில், போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக 10 பேருக்கு புதிதாக மரணதண்டனை நிறைவேற்றப் படவுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர் வதேச மன்னிப்பு சபை உடனடியாக இக்'கொலை ந டவடிக்கைகளை' நிறுத்துமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.எனினும், இரண்டு முக்கிய போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கே தாம் இத்தண்டனை விதித்துள்ளதாகவும், இஸ்லா மிய சட்டதிட்டத்தின் படி இது சரியான நடவடிக்கை யே எனவும், நாட்டில் போதைபொருள்

பிரச்சினை பூதாகரமாவதை தடுக்க இ தை தவிர வேறு வழி தம்மிடம் இல்லை எனவும் ஈரானிய அரசு தெரிவித்துள்ள து.

அனைத்து மரணதண்டனை தீர்ப்புக்களையும் இரத்து செய்யுமாறு கடந்த வாரம் ஈரானுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்திருந்தது. லண்டனை மையமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் விடுத்துள்ள புள்ளிவிபர ஒன்றில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் 344 பேருக்கு ஈரான் அரசு மரனதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இன்று வரை போதை பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக ஈரானிய படைவீரர்கள் மேற்கொண்டுவரும் மோதல்களில் 3,500 ஈரானிய படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: