தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.10.12

லண்டன்: சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி மீது தாக்குதல்.


பொற்கோவிலில் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய ராணுவ முன்னாள் அதிகாரி குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடத்தப்பட்டது.குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் தாக்குதல் நடத்தினர். கூரிய ஆயுதத்தால் அவர்கள் தாக்கியதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்

நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குல்தீப் சிங் குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் குறித்து லண்டன் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: