தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.10.12

ஈராக்கில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு : 32 பேர் பலி

நேற்று ஈராக் தலைநகர் பக்தாத்தின் தாஜி, மடைன் மற்றும் டர்மியாஹ் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த து ப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்க ளில் 32 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் 104 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்ற ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிகழ்த்தப் பட்ட இதே போன்ற ஒரு தாக்குதலில் 69 பொது மக்கள் பலியாகியிருந் தமை குறிப்பிடத்தக்கது.பக்தாத்தின் வடக்கேயுள்ள பக்கூபா
இல் மூன்று கார்க்குண்டுகள் வெடித்ததில் மூவர் பலியானதாகவும் 19 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்புப் படையினரும், மருத்துவரும் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தாத்தின் குட் எனும் பகுதியில் போலிசாரின் எரிபொருள் நிலையம் அருகே ஓர் கார் குண்டு வெடித்ததில் ஒரு இளைஞரும் மூன்று போலிசாரும் கொல்லப் பட்டதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பக்தாத் நகரில் வன்முறை உச்சக் கட்டமாக 2006 மற்றும் 2007 இல் குறைவாகக் காணப்பட்ட போதும் கொலை வெறித் தாக்குதல்கள் தற்போது ஒவ்வொரு நாளும் அங்கு அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: