தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.12

பாகிஸ்தான் அமெரிக்க தூதரக கார் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 4 பேர் பலி


இன்று காலை பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அ மைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென் று கொண்டிருந்த தூதரகத்துக்குச் சொந்தமான கார் ஒன்றின் மீது தீவிரவாதிகளால் ஓட்டப்பட்டு வந்த வெடிகுண்டுகள் அடங்கிய கார் ஒன்று மோதி வெடி த்துச் சிதறியது.இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் கருகி பலியானார்கள். இதில் இருவர் அமெரி க்கர்கள் ஆவார்கள். மேலும் 12 பேர் படு காயம் அ டைந்தனர். உடனடியாக விரைந்து வந்த மீட்புப் ப டையினர் காயமடைந்தவர்களை
அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்த் தனர். மேலும் குறித்த இடத்தில் பாதுகாப்பும் பலப் படுத்தப் பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் இருவர் அமெரிக்கர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்திற்கு இதுவரை  எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. சமீப காலமாக பாகிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தாவினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் பலப்படுத்தி வரும் நிலையில் இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் அதிகளவு நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: