தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.12

நோட்டோ படைகளை அடித்து நொருக்குவோம்: தலிபானியர்கள் எச்சரிக்கை


பாகிஸ்தானில் நேட்டோ படைகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபானியர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் அமைப்பின் தகவல் தொடர்பாளர் எஷானுல்லா குறிப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் எங்கள் சகோதரர்களை போன்றவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ படைகளுக்கு பொருட்களை வழங்கும் வாகனங்கள், பாகிஸ்தான் வழியாக செல்வதை அனுமதிக்க முடியாது.
அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு சிறிது காலம் இந்த போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்து நாடகமாடியுள்ளது என்றார்.
நேட்டோ படைகளுக்கு எரிபொருள் வழங்கும் டேங்கர் லாரிகள் வரும் 7ம் திகதி முதல் தங்கள் பணியை துவக்க உள்ளன. நேட்டோ படைகளுக்கான வாகனங்களுக்கு சாலையை திறந்து விட்டதற்காக பாகிஸ்தான் டேங்கர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கமார் சமான் குறிப்பிடுகையில் நேட்டோ படைகளுக்காக அதிநவீன ஆயுதங்கள் பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது என்றார்.

0 கருத்துகள்: