தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.7.12

சிரியாவில் நேற்றைய முதல் நாள் தாக்குதலில் 200 க்கு மேற்பட்டோர் பலி :


சிரியாவில் நேற்றைய முதல்நாள் புதன்கிழமை தா க்குதலில் 200 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதா க அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.சிரிய அதிபர் பசார் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பி க்கப்பட்ட 16 மாதங்களில், ஒரே நாளில் நடத்தப்பட் ட மிக மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றா க பதிவாகியுள்ளது. 124 பொதுமக்கள், 62 படை வீரர் கள், 28 கிளர்ச்சியாளர்கள் உட்பட மொத்தம் 214
பேர் பலியாகியிருப்பதாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள் ளன. 
அசாத் அரசின் மிக முக்கிய மூன்று தலைவர்களும் இக்குண்டுவெடிப்பின் போது பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல்களை அடுத்து, கடந்த 2011 மார்ச் மாதம் முதல் சிரிய கலவரங்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

0 கருத்துகள்: