தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.7.12

நித்தியானந்தாவுக்கு ஆண்மைக்குறைவா? மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவு!


வரும் 30 ஆம் தேதி நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக நித்தியானந்தா கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய ராமநகரம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து நித்திக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக நித்தி பெங்களூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்தில் நித்தி ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நித்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக லெனின் கருப்பன் அளித்த புகாரைத்
தொடர்ந்து வழக்கை விசாரித்த ராமநகரம் கோர்ட் நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் நித்திக்கு ஆண்மைக் குறைவு இருப்பதாகவும், அதை சரி செய்யவே நித்தியனந்தா இது போன்ற  செயல்களில்  ஈடுபடுவதாகவும் லெனின் கூறியிருந்தார்.

பல்துறை மருத்துவர்கள் நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்வார்கள் என்று சிஐடி தெரிவித்துள்ளது.சோதனையில் நித்தி ஆண் என்பது உறுதியானால் நடவடிக்கை தீவிரமாகும்

0 கருத்துகள்: