தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.4.12

ஹைதராபாத் : தொடரும் அக்கிரமம்! துணை நிற்கும் அதிகார வர்க்கம்!!


ஹைதராபாத் நகரத்தை கலவரக்காடாக மாற்றும் திட்ட த்துடன், சங்பரிவார் கும்பல் கொலை வெறியுடன் செய ல் பட்டு வருகிறது.கடந்த 2007 ம் ஆண்டு, ஹைதராபாத் தில் உள்ள மக்கா மசூதியில் குண்டு வெடிப்பை நடத்தி, கலவரத்தை ஆரம்பித்து வைத்தனர். அதிலும், ஆரம்பத் தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு, க டும் சிரமம் அனுபவித்தனர். பின்னர், சங்பரிவார் கும்ப லின் சதி வெட்ட வெளிச்சமாகி, தற்போது காவி பயங்கர வாதிகள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறனர்.
தொடர்ந்து 2010 ம் ஆண்டு ராமந வமியின் போதும் கலவரம் உண்டாக்கினர். 
கடந்த வாரம், ஹைதராபாத் பழைய நகரத்தில் வகுப்புக்கலவரம் பரவ காரணம், வி.ஹெச்.பி ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சுக்கள் தான், என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொகாடியாவின் வெறியூட்டும் பேச்சுக்கு பிறகு, வி.ஹெச்.பி தலைவர் கோவிந்த்சிங், குர்மாங்குடாவில் பா.ஜ.க கவுன்சிலர் ஸஹதேவ் ஆகியோரின் தலைமையில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர், என்று ஹைதராபாத்தில் மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்லின் கண்காணிப்பு கமிட்டி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளது. 
போலீஸ் முன்னிலையில் முஸ்லிம்களும், முஸ்லிம் நிறுவனங்களும் தாக்குதலுக்கு ஆளாகினர் என்று பி.யு.சி.எல் குற்றம் சாட்டுகிறது. கொந்தளிப்பை உருவாக்கும் உரைகளை நிகழ்த்தியதற்காக, பல்வேறு வழக்குகள் தொகாடியாவின் மீது ஹைதராபாத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி, உரை நிகழ்த்த போலீஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 
ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் வன்முறைகளால் கலவர பூமியாக மாறிய ஹைதரபாத் நகரத்தின் ஸய்தாபாத், மவுனாபேட் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இதற்கிடையில் காசிக்கொடாவில், 2 மசூதிகளில் பன்றிகளை வெட்டி போட்டு விட்டு, பள்ளிவாசலின் மொட்டை மாடியிலேயே மது அருந்தி கலாட்டா செய்த கும்பல், (11/04) அதிகாலை "பகதூர் புரா" என்னும் இடத்தில் இப்ராஹீம் கலீலுல்லாஹ் பள்ளிவாசல், உள்புற வாயிலுக்கு மிக அருகில், "ஒரு நாயை ரத்தம் தோய்ந்த நிலையில் வெட்டி போட்டு விட்டு" சென்றுள்ளனர். போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட உடன், போலீஸ் அதை மறைக்கும் வேலைகளையே செய்துள்ளது. 
முஸ்லிம் போலீஸ் மூவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து, அவர்கள் கைகளாலேயே அதை அப்புறப்படுத்தி விட்டு, நடவடிக்கை எதற்கும் உத்தரவிடவில்லை. சம்பவம் நடந்து 30 மணி நேரமாகியும் தற்போது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. தங்களுடைய ஃபாசிஸ அஜண்டாவை நடைமுறை படுத்துவதற்காக‌ சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. 
இவர்களை கைது செய்யும் விஷயத்தில், காவல் துறை அலட்சியம் காட்டி வருகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம். கலவரத்தை தூண்டும் விஷமிகளை கட்டுப்படுத்துவதை விட, அநீதிக்கெதிராக, அநியாயத்தை தட்டிக்கேட்க, ஒன்று திரளும் முஸ்லிம்களை கைது செய்வதில் தான், காவல்துறை முனைப்பு காட்டுகிறது. காவல்துறையின் செயல்பாடுகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

0 கருத்துகள்: