தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.4.12

ஹைதராபாத் : கோவிலில் மாட்டுக்கறியை வீசி கலவரத்துக்கு வித்திட்டவன் கைது!

நாட்டில், ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தி, தங்களு டைய ஃபாசிஸஅஜண்டாவை நடைமுறை படுத்துவதற்கா க‌, சமூக நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடம், பகையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், ஹிந்து வாஹினி போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. ஆ ர்.எஸ்.எஸ், தீவிரவாதி ஒருவன், ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை
வீசியதோடல்லாமல், யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர்,
என மக்களிடம் விஷமம் செய்து, கடும் கலவரத்தை ஏற்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கயவனின் பெயர், G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19, 7ம் வகுப்பு வரை படித்துள்ளான். (அவனுக்கு 18 வயது தான் ஆகிறது என்றும், அவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், அவனை காப்பாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளனர், ஹிந்துத்துவா தீவிரவாதிகள்) தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட அவனை, நேற்று பத்திரிக்கையாளர் முன்பு, போலீசார் ஆஜர் படுத்தினர். மேலும், விஷமி சிவகுமார் மீது IPC 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்: