தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.2.12

இந்து முன்னணியினரின் மற்றுமொரு அராஜக செயல்


பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மற்றும் அவ ரது உறவினரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜாவிற் கு எதிராக இந்துமுனன்ணியினர் கருப்புக்கொடி கட்டியு ள்ள சம்பவம் நெல்லையில் பெரும்பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழா வின் ஒருபகுதியாக, பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதற்காக
சாலமன் பாப்பையா மற்றும் ராஜா நெல்லைக்கு வரு கை தர உள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், மற்றொரு மத வழிபாட்டு தலத்தில் கலந்துகொண்ட இவர்கள் இந்து கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருகை தரக் கூடாது என்பதை வலியுறுத்தி பாப்பையா மற்றும் ராஜா தங்க உள்ள ஹோட்டலைச் சுற்றிலும் இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கருப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

hindumunnani done correctly

kuttralanathan சொன்னது…

hindumunnani done correctly