தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.11

சேலையில் கலக்கும் உலகின் மிக குள்ளமான பெண்மணி : புதிய கின்னஸ் சாதனைக்காரர்!

உலகின் மிக குள்ளமான பெண்மணி எனும் புதிய சாத னையை நிகழ்த்தியிருப்பவர் ஒரு இந்தியர்.அதுவும் சாரி யில் கலக்கும் நாக்பூர் பெண்மணி என்றால் சந்தோஷம் யாருக்கு தான் வராது?கடந்த டிசம்பர் 16 ம் திகதி, தனது 18 வது வயது பிறந்த தினத்தில், ஜோதி அம்கே இப்புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.அவருடை ய மொத்த உயர 62.8 செ.மீ. ஒரு உயர்தர பள்ளி மாணவி. Achondroplasia எனும் குறைபாடு தான்
அவருடைய இந்த அபரி தமான வளர்ச்சி குறைவுக்கு காரணம். தனது பிறந்தநாள் தினத்தில் கின்னஸ் சாதனை பதியப்படும் போது அக்கா, தங்கை, பெற்றோர் என அனைவரும ம் கூட இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது என கூறும் ஜோதி அம்கே தீவிர பாலிவூட் சினிமா பிரியர். ஒரு நாள் சில்வர் ஸ்கிரீனில் கலக்கும் ஸ்டார் ஆவேன் என்கிறார் உற்சாகத்துடன்.இவருடைய உயரம் போன்று, குரலும் பாபியூலர். அழகான அணில் (chipmunk) குரல் என காமெண்டுகள் குவிகின்றன.
 

0 கருத்துகள்: