தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.10.11

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் 4 தமிழர்கள் பலி


குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 4 தமிழர்கள் பலியாயினர். குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்று மினா அல் அகமதியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு 4,60,000 பேரல் எண்ணெய் சுத்திகரிக்கப்படும் நிலையில், நிலையத்தில் உள்ள எரிவாயு ஆலையில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது கேஸ் பைப் தீடீர் என வெடித்தது.
இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராஜாராம் லக்ஷ்மையா ரெட்டி, லோகநாதன் பொன்னையா
செந்திவேல், ஜானகிராமன் அர்ஜுனன் மற்றும் சிவச்சந்திரன்ஷண்முகம் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இதனை உறுதிபடுத்தியுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இறந்தவர்களின் உடல்களை மீட்டு இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துகள்: