தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.7.11

தயாநிதிமாறன் ஊடகங்களின் இரை-கலைஞர் வருத்தம்

karunanidhi_dayanithi_001
சென்னை:தயாநிதி மாறன் ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு இரையாகிவிட்டார் என தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் கலைஞர் மு.கருணாநிதி.
இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி தான் நடைபெறுகிறது.ஊடகங்கள்
நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்திவிடலாம். தயாநிதி மாறனுக்கும் இதிலிருந்து தப்ப இயலவில்லை. தயாநிதி மாறனுக்கு கட்சி உறுதுணையாக இருக்கும்.
அமைச்சரவை மறு சீரமைப்பில் தயாநிதி மாறனுக்கு பதிலாக வேறு அமைச்சரை நியமிக்க தி.மு.க கோரிக்கை விடுக்காது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தோ காங்கிரஸிலிருந்தோ எவரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என இதுத்தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டார். சோனியா காந்திக்கு நேற்று முன் தினம் தான் கடிதம் எழுதியதாக வெளியான செய்தியை மறுத்தார் அவர்.

0 கருத்துகள்: