குரான் உள்ளிட்ட எந்த புனித நூலையும் அவமதிப்பது என்பது மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றும், குறுகிய மனப்பான்மை எண்ணம் கொண்டது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஃப்ளோரிடா கிறித்தவ தேவாலயத்தில் டெர்லி ஜோன்ஸ் என்ற பாதிரியாரால் குரான் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானில் ஐ.நா. ஊழியர்கள் 7 பேரும், காந்தகாரில் 10 பேரும் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எந்தவொரு புனித நூலையும் அவமதிப்பது மத சகிப்புத் தன்மை இல்லாதையே காட்டுகிறது, குறுகிய எண்ணம் கொண்து. ஆனால், அந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாவி மக்களைத் தாக்கி படுகொலை செய்வது கொடூரமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக