தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.1.11

மாவி மரமராவின் மீள்வருகையை எதிர்பார்த்திருக்கும் இஸ்ரேல்

கடந்த மே (2010) மாதம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கடும் தாக்குதலுக்குள்ளான துருக்கிய மனிதாபிமான நிவாரண உதவிக் கப்பல் மாவி மர்மராவின் காஸாவுக்கான மீள்வருகையில் தாம் பெரிதும் கரிசனை கொண்டிருப்பதாக இஸ்ரேலிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கிய மனிதாபிமான நிவாரண நிதியம் எதிர்வரும் மே மாதம் காஸா நோக்கிச் செல்வதற்காக மாவி மர்மரா உட்பட நிவாரணப் பொருட்கள் அடங்கிய மற்றும் 12 கப்பல்களை ஏற்பாடுசெய்து வருகின்றது என இஸ்ரேலிய தினசரி மஆரிவ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிவாரணப் பொருட்களை அஷ்டொட் துறைமுகத்தின் வழியே விநியோகிப்பதற்குத் தம்மிடம் கையளிக்குமாறு இஸ்ரேல் கோரியபோது நிவாரணக்குழுவினர் அதை ஏற்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தோல்வியைப் புறங்காணச்செய்தல்' என்ற அவர்களின் நோக்கத்தை முறியடிக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. 

0 கருத்துகள்: