அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு முன்னணி ஒன்றை ஏற்படுத்த தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நோக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள குழுவில் முஸ்லீம் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் கட்சிகளின் அரசியல் தீர்வு யோசனையை தயாரிப்பதற்கான கூட்டுக்குழுவின் உறுப்பினருமான சுமந்திரன், அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என கூறியுள்ளார்.
இந்த யோசனை குறித்து ஆராய கூட்டுக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பன இணைந்து அரசியல் தீர்வு தொடர்பான யோசனையை தயாரிப்பதற்காக கூட்டுக் குழுவொன்றை ஏற்படுத்தின
0 கருத்துகள்:
கருத்துரையிடுக