தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.10

விக்கிலீக்ஸை கண்கானிக்க அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கை .

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை கண்காணிப்பதற்கு அமெரிக்க

உளவுத்துறையான சி.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு WikiLeaks Task Force (WTF) என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் வெளிநாட்டு உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பாக அவர்களின் விசாரணைகள் இருக்குமென்று தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து டிப்பாட்மென்ட்களிலும் இருந்து 10 க்கும் மேற்பட்டோர் அங்கம் வகிக்கும் இந்த குழு சி.ஐ.ஏ யின் Counterintelligence Center இனால் நிர்வகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌திவா‌லாகு‌ம் வ‌ங்‌கி‌க‌ளி‌ன் ரக‌சிய‌ங்களை வெ‌ளி‌‌‌யிடுவ‌ே‌ன் என ஜூலியன் அசாஞ்சே மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: