தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.1.13

எகிப்து கிளர்ச்சியில் இடம்பெற்ற வன்முறைகளை தொலைக்காட்சியில் பார்த்தார் முபாரக்?


எகிப்திய கிளர்ச்சியின் போது, மக்கள் போராட்டத் தை நேரடி தொலைக்காட்சி செய்திகள் மூலம் முபா ரக் பார்த்து வந்ததாகவும், அவருக்கு தெரியாமல் அ வரது படைகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது எனவும முபாரக்குடன் நெருங்கிப்பழகியிருந்த ஒரு வர் தெரிவித்துள்ளார்.  எகிப்தியப் புரட்சியில் சுமார் 900 பேரின் படுகொலைக்கு காரணமாக இருந்ததால்,  தனது பதவியில் இருந்து வெளியேற்றப் பட்ட எகி ப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் தற் போது ஆயுள் தண்டனை பெற்று
சிறைவாசமிருந்து வருகிறார்.  எனினும் பொ துமக்கள் போராட்டத்தின் போது தனது அரச படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருந்ததை தான் அறிந்திருக்கவில்லை எனவும் தனது உத வியாளர்கள் தனக்கு இதனை மறைத்துவிட்டதாகவும் நீதிமன்ற விசாரணைக ளின் போது அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற 18 நாட்களாக அங்கு இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணியை ஹோஸ்னி முபாரக் தனது மாளிகையிலிருந்து  சாட்டெலைட் தொலைக்காட்சி மூலம் அவதானித்து வந்ததாக மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் அஹ்மெட் ரக்ஹெப்பும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

84 வயதான ஹோஸ்னி முபாரக் ஆயுள் தண்டனை பெற்றுள்ள போதும் இது குறித்து மறுவிசாரணை மேற்கொள்ளப் படும் வாய்ப்பு தோன்றியுள்ளது. இந்நிலையிலேயே இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

0 கருத்துகள்: