தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.12

மாயர்களால் பேயர்களான உலகம்..

பேயர்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவிய மாயர்களின் காலக்கணக் கு..மாயர்களின் காலக் கணக்குப்பட21.12.2012 இரவு 22.15 அளவில் உலகம் அழி ந்திருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை அந்த செய்தியை பெரியள வில் பரப்பிய அமெரிக்க கொலிவூட்டும் அதன் கொள்கைப் பிரிவும் உலகளாவி ய ரீதியில் பேயர்களின் தொகையை அளவெடுத்திருக்கும்.மாயர்களால் கணிக்கப்பட்ட காலக்கணக்கு 21.1212 டன் முடிவடைவதால் உலகம் அழியும்
கடைசித் திகதி முடிவடைந்துவிட்டது கொலிவூட்டில் படமெடுப்பவர்கள் புரட்டிவிட்ட புரளி உலகை ஓர் உலுப்பு உலுக்கிவிட்டு சென்றுவிட்டது.தமிழில் பஞ்சாங்கம் பார்ப்போர் வருடங்கள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைப்பார்கள் நவதானிய வருடம், இரத்தாசி வருடம் என்று அறுபது பெயர்கள் சுழன்று சுழன்று வரும்.
இந்த வருடத்தின் பெயர் அடுத்து அறுபது வருடங்களின் பின்னர் மீண்டும் திரும்பி வரும், இதுபோல ஒரு கணிப்புத்தான் மாயர்களின் கணிப்பு.
சுமார் ஐயாயிரம் வருடங்கள் கொண்டது இவர்களுடைய கலண்டராகும், நேற்று முடிந்த அந்தக் கலண்டர் நம்மவர்களின் பஞ்சாங்க வருடங்கள் போல மறுபடியும் சுழன்று வரும்.
மேலும் மாயர்களின் கலண்டரின் படி உலகம் தோன்றி ஐயாயிரம் வருடங்கள்தான் ஆகிறது என்று தெரிவிக்கிறார்கள், பல கோடி ஆண்டுகள் கொண்ட புவியின் தோற்றம்பற்றி அவர்களுக்கு தெரியவில்லை.
நேற்று மாயர்கள் இனத்தின் தலைவர் கூறும்போது உலகம் அழியும் என்ற முடிவுக்கு தாம் மாறானவர்கள் என்றும் அதை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
ஆனால் உலகம் அழியப்போகிறது என்ற விடயம் பூமியின், சுற்றுகை சுழர்ச்சிக்குள்ள வேறுபாடுகூட தெரியாத பாமர மக்களிடம் விரைவாகப் போய்ச் சேர்ந்தது அவதானிக்கப்பட வேண்டியது.
அழிவை உணர அதிக அறிவு வேண்டியதில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கிறது.
உண்மையை வைத்து உலகத்தை ஏமாற்றுவதைவிட ஆதாரமற்ற பொய்களை வைத்து உலகத்தை எவ்வளவு தூரம் ஏமாற்றலாம் என்பதற்கு உலகம் அழியும் என்ற புரளி பரிபூரண ஆதாரமாகிவிட்டது.
அதேவேளை பூமியை காப்பதாகக் கூறி மத வழிபாடுகள், பூசைகள், பலிகள் என்று ஏராளம் பணத்தை மதவாதிகள் சுருட்டி பாக்கட்டுக்குள் போட்டுக் கொண்டார்கள்.
அதைவிட பெரிய ஆபத்து வேற்றுக்கிரகவாசிகள் தாக்குகிறார்கள் என்று நாமே நம்மை அழித்து பரிநாசமாகக்கூடிய திட்டத்திற்கான முன்னேற்பாடு இதில் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உலக அறிஞர்கள் இனம்பிரித்துக் காட்டவில்லை.
சந்திரமண்டலத்திற்கு போகாமலே போனது போலவும், உலகம் அழிகிறது என்று புரளியைக் கிளப்பி ஒரு கண்டத்தையே முற்றாக அழித்து அதன் வளங்களை சுரண்டவும் எதிர்கால விஞ்ஞானம் முயற்சி எடுக்கலாம்.
1. பறக்கும் தட்டு புரளி 2. வேற்றுக்கிரகவாசிகள் புரளி 3. மாயர்களின் நாட்காட்டி புரளி 4. 2012 உலகம் அழியும் புரளி இத்தனையும் ஒட்டு மொத்த உலகத்தையும் ஏமாற்ற நடைபெறும் முன்னேற்பாடுகள் என்ற கொன்ஸ்பிரேசன் கோட்பாடுகளை அவதானிக்க வேண்டும்.
மாயர்களின் நாட்காட்டி உலகம் அழிவதை எடுத்துக்காட்டாவிட்டாலும் உலகத்தின் அழிவுக்கு காரணமாகப் போகும் பேயர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை படம் போட்டுக் காட்டியுள்ளது.
21 ம் நூற்றாண்டிலும் உலகத்தில் இவ்வளவு நிறைவான பேயர்கள் இருக்கிறார்களா என்ற உண்மையை கண்டறிய உதவிய மாயர்களின் நாட்காட்டியை கேலி செய்வதைவிட பாராட்டுவதே சிறந்தது.

0 கருத்துகள்: