தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.12.12

இந்தியாவில் 2000/- ரூபாயில் மதக்கலவரத்தை தூண்டி விடலாம்” – சொல்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ


ந்தியாவில் உள்ள மக்களில் 90 சதவீதம் பேர்கள் முட்டாள்கள் என்றும், வெறும் 2000 ரூபாய் இருந்தா ல் டெல்லியில் ஈஸியாக மதக்கலவரத்தை தூண்டி விடலாம் என்றும் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவ ரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க் கண்டேய கட்ஜூ சாடியுள்ளார். மதத்தின் பெயரால் இந்தியர்களை தீய சக்திகள் தவறாக வழி நடத்த மு யல்வதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற
கருத்தரங்கு ஒ ன்றில் கலந்துகொண்டு பேசியஅவர், மக்களுக்கு தலையில் மூளை என்பது இல்லை என்றார். டெல்லியில் வெறும் 2 ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மதம் தொடர்பான வன்முறைச் சம்பவத்தை தூண்டி விடலாம் என்ற நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1857 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் மதவாதம் என்பது இல்லை என்று கூறிய கட்ஜூ, ஆனால், தற்போது நிலைமை அப்படி அல்ல என்றார். ஆங்கிலேய ஆட்சியின் போதுதான், இந்தியாவில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினை உருவாக்கப்பட்டது, அது இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை எனவும் கட்ஜூ தெரிவித்தார். மேலும் மக்கள் இதுபோன்ற விஷயங்களில் தெளிவாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற கடினமான வார்த்தைகளை தெரிவிக்க வேண்டியதாகி விட்டது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கட்ஜூயின் இந்த கருத்துக்கு இதுவரை எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: