தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.11.12

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி அதிரை மாணவன் படுகொலை !!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவ ர்களின் மகன் ஹாஜா [ வயது 20 ] , அதி ரை பிலால் நகர் பகுதி யைச் சேர்ந்தவர் காதர் மு ஹைதீன் [ வயது 23 } [ 23-11-2012 ] மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனி யாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின் னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.இரத்த வெள்ளத்தில் உயிருக்கு
போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின் றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றன ர். அங்கே போதிய வசதி கள்இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களா ல் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சை க்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்த அதிரை த.மு.மு.க வினருக்கு சொந்தமான ஆம்புலன்சில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதியளிக்கப்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி இன்று [ 24-11-2012 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் உயிர் பிரிந்தன [ இன்னா லில்லாஹி...] பிரத பரிசோதனையடுத்து உடல் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

    கத்தியால் குத்திய காதர் முஹைதீன் காவல்துறையில் சரண் அடைந்ததை தொடர்ந்து அவர் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட விரோதத்தின் காரணமாகவே கத்திகுத்து நடைபெற்றது என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இச்சம்பவம் தெருவின் முக்கிய பகுதியில் நடைபெற்றதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றன. நன்றி, adirai xpress

0 கருத்துகள்: