தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.9.12

நரோதா பாடியா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கி மீது சிறைக்கைதிகள் தாக்குதல்?


குஜராத் நரோதா படியா மதக்கலவரத்தில் குற்றம் சு மத்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முன்னா ள் பாஜ்ரங் தள் கட்சித்தலைவர் பாபு லால் பஜ்ரங்கிக் கு சிறைக்கைதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருக்கிறது.சபர்மதி மத்திய சிறையில் உள்ள அவர் மீ து சிறைக்கைதிகள் அடித்து தாக்குதல் நடத்தியிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதையடுத்து விஷ்வ ஹிந்து
பரிசத்தலைவர்கள் சிறைக்கு வெளி யில் தர்ணாவிலும் ஈடுபட்
டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் வி ஷ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவிகையில், குஜராத்தின் உயர் பாதுகாப்பு சிறைச்சாலைகளில் கூட இந்து கைதிகளுக்கு பாதுகாப்பு இல் லை என்பதை நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். தற்போது அதை நிரூபிக்கும் முகமாக இச்சம்பவம் நடந்துள்ளது' என்றார்.

நேற்று செவ்வாய்க்கிழமை, சிறையிலிருந்து மருத்துவ பரிசோதனைக்காக பஜ்ராங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அப்போது குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய கைதிகள் சிலரும், அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய கைதிகள் சிலரும் அங்கு தற்செயலாக வந்திருந்ததாகவும் அப்போதே குழு மோதலில் பஜ்ராங் தால் அகப்பட்டுக்கொண்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நரோதா பாடியா, 97 முஸ்லீம்கள் படுகொலை சம்பவம் தொடர்பில், பாஜ்ராங்கி உட்பட பாஜக எம்.எல்.ஏ மயா கோத்னானி மற்றும் 31 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.

நேற்றைய தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், எந்தவிதமான தாக்குதலும் நடைபெறவில்லை. சிறைக்கைதிகள் மோசமான வார்த்தை பிரயோகங்களை மட்டுமே பயன்படுத்தினார்' என்றார்.

0 கருத்துகள்: