தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.7.12

விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்


மூன்று சீன விண்வெளி வீரர்கள், சீனாவின் மிக நீ ண்ட, பேரார்வமிக்க விண்வெளிப் பயணத்தை முடி த்துக்கொண்டு , பூமிக்குத் திரும்பி இருக்கின்றனர் .சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை உட்பட மூன்று பேரை கொண்ட இந்தக்குழு, விண் வெளியில் பூமியைச் சுற்றிவரும் ஒரு விண்கலத் துடன் , விண்வெளி வீரர்களைக் கொண்ட மற்றுமொ ரு கலன் இணைவயும் முதல் சீன முயற்சியை சாதி
த்தது. இந்த நடவடிக்கைதான் விண்வெளி நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் திட்டங்களில் முதல் கட்டமாகும்.

இந்த விண்வெளி வீரர்கள் திரும்பி வந்த கலன், வட சீனாவில் மங்கோலிய உட்பகுதியில் புல்வெளியில் தரையிறங்கிய பின்னர் , இந்த குழுவினர், தங்களுக்குள் உரையாடிக்கொள்வதையும், வரவேற்கவந்த மக்களைப் பார்த்து கையசைப்பதையும் அரச தொலைக்காட்சி காட்டியது.

சீனப்பிரதமர் வென் ஷியாபோ, இந்த சாதனை, சீனாவின் சக்தியை அதிகரிக்கும், தேசிய உணர்வுக்கு உத்வேகம் தரும் என்று கூறினார்.
நன்றி: பிபிசி

0 கருத்துகள்: