தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.7.12

சீன விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதிகள் இருவர் மரணம்


பயங்கரவாதிகள் இரண்டு பேர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.. இங்குள்ள மக்கள் சிலர், தனி நாடு கோரி வருகின்றனர். தனி நாடு கோருபவர்கள், அண்டை நாடுகளில் பதுங்கிக் கொண்டு, சீனாவில் குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளை செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 29ம் தேதி, சின்ஜியாங் மாகாணத்தில், ஹோட்டன் என்ற இடத்திலிருந்து, உர்ம்குய் பகுதிக்கு, "டியான்ஜின்' ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.புறப்பட்ட 10 நிமிடம் கழித்து, விமானத்தில் இருந்த ஆறு பேர், பைலட்டை

மிரட்டி, விமானத்தை வேறு இடத்துக்கு திருப்பிச் செலுத்துமாறு கூறியுள்ளனர். விமானத்தை, தாங்கள் சொல்லும் இடத்துக்கு செலுத்தாவிட்டால், வெடி வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டினர்.

இதை தொடர்ந்து, விமானத்திலிருந்த ஆறு போலீசார் மற்றும் விமான ஊழியர் உள்ளிட்டோர், கடத்தல்காரர்களுடன் கடுமையாக சண்டையிட்டனர். இதில், இரண்டு கடத்தல்காரர்கள் பலத்த காயமடைந்தனர்.விமானம், புறப்பட்ட ஹோட்டன் நகருக்கே திரும்பியது. விமானம் தரையிறங்கியதும், கடத்தல்காரர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.

பலத்த காயமடைந்த இரண்டு கடத்தல்காரர்கள், சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையில் நேற்று இறந்தனர்.இந்த விமானத்தில், 92 பயணிகளும், ஒன்பது விமான ஊழியர்களும் இருந்தனர். விமானத்தில் பயணித்த போலீஸ் அதிகாரிகள் ஆறு பேர், ஆயுதங்கள் வைத்திருந்ததால், அதை வைத்து, கடத்தல்காரர்களை மடக்கியதாக, சீன பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்: