தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.7.12

12 மணி நேரத்தில் திருக்குரானை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவன்

மும்பை, ஜூலை.8- மராட்டிய மாநிலம் அகமத் நக ரை சேர்ந்த சிறு வன் ஹபீஷ் முகமது ஜபியுல்லா (வயது 12). இவன் தரூல் உலூம் தஜூல் மஸ்ஜித் பள்ளியில் படித்து வருகிறான். இவன் இஸ்லாமி யர்களின் புனித நூலான திருக்குரானை முழுமை யாக மனப்பாடம் செய்துள்ளான். நேற்று அவன் குரானை பார்க்காமல் மனப்பாடமாக ஒப்புவித்தான். காலை 8 மணிக்கு குரானில் உள்ளதை சொல்ல தொடங்கிய அவன் 12 மணி நேரம் ஒப்புவித்து இரவு 8 மணிக்கு முடித்தான்.குரான் முழுவதையும்

மனப்பாடமாக மனதில் பதிய வைக்க அவனுக்கு 8 மாதங்கள் ஆனதாம். குரான் முழுவதையும் மனப்பாடமாக ஒப்புவித்து முடித்த பிறகு அவனுக்கு ஏராளமானவர்கள் பரிசுகள் வழங்கினார்கள். 

0 கருத்துகள்: