தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.6.12

பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மோசமான நாடு: புதிய ஆய்வு தகவல்கள்


உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வ ந்த நாடுகள் மட்டத்தில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன் றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிக அடிமட்டத்தில் இருக்கின்ற நாடாக சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபௌண்டேசன் அ மைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களு க்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விடயங்க ள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.உலகில் அபிவிருத்தி யடைந்த மற்றும் பொருளாதார ரீதியான முன்னேற் றம் கண்டுவரும் 19
நாடுகள்பற்றி, குறிப்பாக மெக்ஸிக்கோ,இந்தோனேசியா, பிரேசில், மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் எதுவும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை.
இந்தியாவில் நடந்துவரும் சிறுவயது திருமணங்கள், சீதனக்கொடுமைகள், வீட்டில் நடக்கும் வன்முறைகள், பெண் சிசுக் கருக்கொலை உள்ளிட்ட விவகாரங்களால் தான் இந்தியா இந்த நாடுகளின் பட்டியலில் பெண்கள் நலனில் மிக அடிமட்டத்தில் இருக்கின்றது.
இந்தியாவில் வீட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றப் போக்கைக் காட்டிவருவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சவுதியிலும் பார்க்க கீழ் மட்டத்தில்ஆனால் அங்கு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டப்படும் வன்முறைகள், குறிப்பாக வருமானம் குறைந்த வறிய குடும்பங்களில் தாராளமாகக் காணப்படுவதாகத் தான் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வாகனம் ஓட்டுவதற்கும் தேர்தலில் வாக்களிப்பதற்கும் பெண்கள்அனுமதிக்கப்படாத சவுதி அரேபிய தேசத்தை விடவும் கூட இந்தியா பெண்களுக்கான அந்தஸ்து மற்றும் அங்கீகாரத்தில் கீழ் நிலையில்தான் இன்னும் இருக்கிறது என்பது தான் ஆச்சரியத்துக்குரிய விடயம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் என்பது அவர்களின் வர்க்கம் மற்றும் செல்வத்தைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
அங்கும் நன்றாகப் படித்த, தொழில்புரிகின்ற மேற்குல வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்ற, சுதந்திரத்தை அனுபவிக்கின்ற மேல்தட்டு வர்க்கப் பெண்களும் தாராளமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
அங்கு 1960களிலேயே அந்த நாடு பெண்ணொருவரை பிரதமராக்கியிருக்கிறது. இப்போதுகூட, பெண்ணொருவர்தான் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் இருக்கிறார்.
ஆனால் இந்த நிலைமைகள் பின்தங்கிய கிராமங்களிலும் வளர்ச்சிக்குறைந்த மாநிலங்களிலும் அப்படியே தலைகீழாகத்தான் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபெளண்டேஸனின் ஆய்வுப்படி, பெண் நலன்கள் பற்றிய விடயத்தில் கனடாதான் மிகச்சிறந்த நாடாக இருக்கிறது.
அடுத்தபடியாக ஜெர்மனியும், பிரிட்டனும் இருக்கின்றன. அமெரிக்கா பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.

0 கருத்துகள்: