தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.4.12

பா ஜ க அரசை ஆதரித்தது மாபெரும் தவறு : சந்திரபாபு நாயுடு


தெலுங்குதேசம் கட்சி அரசியலில் செய்த ஒரே தவறு பாரதிய ஜனதா ஆட்சியை ஆதரித்தது தான் என்று அக்கட்சியின் தலைவர் சந்திரபாபுநாயுடு கூறியுள்ளார்.1998லிருந்து 2004 வரை இந்தியாவின் மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்த தே.ஜ.கூட்டணி அரசு பாரதிய ஜனதா தலைமையில் நடைபெற்ற போது அதற்கு வெளியிலிருந்து ஆதரவளித்தது தான் தெலுங்குதேசம் கட்சி அரசியலில் செய்த ஒரே தவறு என்று தெரிவித்துள்ள நாயுடு அதுகுறித்து விரிவாக ஏதும் கூறவில்லை.விரைவில் 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதிகளில் ஒன்றில் ஊழியர் கூட்டம் ஒன்றில் சந்திரபாபு நாயுடு இவ்வாறு பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.  நாயுடு மேலும் பேசுகையில் "தெலுங்கு தேசம் ஆட்சி செய்த 1995-2004 காலக்கட்டத்தில்  தூய்மையான இலஞ்ச, ஊழலற்ற அரசை வழிநடத்தியதாகவும், இப்போதைய காங்கிரஸ் அரசில் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: